Sunday 24 August 2014

வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல்

முடக்கற்றான் லேகியம்
    முடக்கற்றான் சமூலம் உலர்ந்தது 250 கிராம், சுக்கு மிளகு, திப்பலி வகைக்கு 50 கிராம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், வகைக்கு 50 கிராம், கழற்சிக்காய் பருப்பு 50 கிராம், மூக்கரைச்சாரணை வேர் உலர்ந்தது 250 கிராம், அவித்து ஊற்றிய சுத்;தமான ஆமணக்கெண்ணை அரை லிட்டர், பனை வெல்லம் 2 கிலோ.
செய்முறை:
    1 லிட்டர் நீரில் பனை வெல்லத்தைப் போட்டுக் காய்ச்சி கல், மண் நீக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகு பதமாகக் காய்ச்சி, ஆமணக்குக்கெண்ணெய் கூட்டி, மேற்படி சரக்குகளைச் சூரணித்து கலந்து கிண்டி கீழிறக்கி ஆற விடவும்.
அளவு:    10 கிராம், காலை, மாலை இருவேளை நீருடன்.
தீரும் நோய்கள்: வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல், கை, கால், உடல் எரிச்சல், முடக்கு, சொரி, வங்கு, வயிற்றுவலி, மேக சூலை, மார்புக்குத்து, மாரடைப்பு, நீர் குத்து, அண்ட வாதம்.

No comments:

Post a Comment