Sunday 24 August 2014

புற்றுநோய்

புற்றுநோய்
    புற்றுநோய் மிகவும் பயங்காரமானது. தாங்க முடியாத வேதனையைத் தருவது. நோய் அனைத்திலும் இது மிகக்கொடியது. புற்றுநோய் ஆங்கிலத்தில் கான்ஸர் எனக் கூறுவது. இந்நோயை சித்த வைத்திய முறையில் புற்று பிளவை எனக் கூறப்படுகின்றது. இக்கொடிய புற்று நோய் உடலில் ஏதாவதொரு பாகத்தில் புது தசைவளர்ச்சியை உண்டுபண்ணி அதன் மூலம் உயிரை மிக விரைவில் மாய்ந்து விடக்கூடிய பயங்கர கொடிய நோய்.
    இந்நோய் ஆண், பெண் இருபாலரையும் 30 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் பீடித்துத் தொல்லை தரும். வேறுபலபாகங்களில் குடியேறி வளர்வதால் அந்தந்த தசை பாகங்கள் இயற்கைக்கு மாறாக வளர்ந்து அதன் காரணமாக, விஷக்கிருமிகள் உண்டாகி, தசைநார்கள் அரித்துத் தின்னும் போது தான் புற்றுநோய் உண்டாகின்றது.
இந்நோயினை சித்த வைத்திய முறையில் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். இதற்கு 3 முறைகளை கையாளுதல் அவசியம். 1. நோயை மேலும் முற்றவிடாமல் அதன் உற்பத்திக் காரணங்களைக் கண்டுபிடிப்பது. 2. தகுந்த சிகிச்சை முறைகளை அளிப்பது. 3. இரண சிகிச்சை செய்யாமல் நேரடியாகவே சித்த வைத்தியம் செய்வது.
                சுpகிச்சை   
நுவபாஷhண பதங்கம், இராமபாண இடிமருந்து, இரசகந்தி மெழுகு, முப்பூரப்பதங்கம், கரிசாலை லேகியம், வேம்புச்சூரணம், சிவனார் வேம்பு சூரணம் முதலிய சிறந்த மருந்துகளில் தேர்ந்த ஒன்றை நோயின் வன்மைக்குத்தக்கபடி உள்ளுக்குக் கொடுத்தும், புங்க எண்ணை, பூரக்களிப்பு, சரமாரிக்குழி தைலம், புற்று இரணத் தைலம் முதலிய வெளிப்பிரயோக மருந்துக்களையும் உபயோகித்து சிறந்த முறையில் குணப்படுத்தலாம்.

No comments:

Post a Comment