Sunday 24 August 2014

பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள்

கல்யாணக க்ருதம்:
    தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.    தும்மட்டி இந்த்ரவாருணீ            12.500 கிராம்
2.    கடுக்காய்(கொட்டை நீக்கியது)        12.500
3.    தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)    12.500
4.    நெல்லிமுள்ளி                12.500
5.    அரேணுகம்                12.500
6.    தேவதாரு                12.500
7.    மூசாம்பரம்                12.500
8.    மூவிலை                12.500
9.    கிரந்தி தகரம்                12.500
10.    மஞ்சள்                    12.500
11.    மரமஞ்சள்                12.500
12.    நன்னாரி                    12.500
13.    நன்னாரி     (கருப்பு)            12.500
14.    ஞாழல் பூ                12.500
15.    நீல ஆம்பல கிழங்கு            12.500
16.    ஏலக்காய்                 12.500
17.    மஞ்சட்டி                12.500
18.    நாகதந்தி வேர்                12.500
19.    மாதுளை ஓடு                12.500
20.    சிறுநாகப்பூ                12.500
21.    தாளீசபத்திரி                12.500
22.    முள்ளுக்கத்திரி                12.500
23.    முல்லைப்பூ                12.500
24.    வாயுவிடங்கம்                12.500
25.    ஓரிலை                    12.500
26.    கோஷ;டம்                12.500
27.    ரத்த சந்தனம்                12.500
28.    பதிமுகம்                12.500
29.    பசுவின் நெய்                800
30.    தண்ணீர்                3.500 லி
செய்முறை: இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம் பாகத்தில் வடிக்கட்டவும்.
அளவு: 5 முதல் 10 கிராம் வரை, ஒரு நாளைக்கு; 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்: இருமல், இரத்த சோகை, இளைப்பு, நாட்பட்ட காய்ச்சல், மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல், கால்கை வலி, ஒருவித குழந்தை நோய், பைத்திய நிலை, நச்சுக்கோளாறு அக்காலத்திய செயற்கை நச்சு, குதிகால்வாதம், அக்கி, மூத்திரக் கோளாறுகள், பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள் போன்ற பெண்ணோய்கள்.
    அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ்சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பப்;பையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத் தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைக் தருகிறது.

No comments:

Post a Comment