Sunday 24 August 2014

இரத்த சோகை மருத்துவம்:

இரத்த சோகை மருத்துவம்:
1.    கருஞ்சீரகம்
2.    சுக்கு
3.    திப்பிலி
4.    ஓமம்
5.    மிளகு
6.    இந்துப்பு
மேற்கண்டவற்றை சம அளவு எடுத்து, முறைப்படி சுத்தம் மற்றும் சுத்தி செய்து சூரணமாக்கி ஒரு கிராம் அளவு, வெல்லத்துடன் உட்கொள்ள வேண்டும்.
    இதனுடன் தொடர் மருந்தாக:
1.    குரிசாலைச் சமூலம்    100 கிராம்
2.    நெல்லி வற்றல்        50 கிராம்
3.    மூக்கிரட்டை இலை    50 கிராம்
4.    கறிவேம்பு இலை    25 கிராம்
5.    புதினா இலை        10 கிராம்
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து, ஒன்று சேர்த்து, நன்றாகக் கலந்து ஐந்து கிராம் அளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட இரத்தித்தில் ஹீமோகுளோபின் அளவு மிகுதியாக இரத்த சோகை நிவர்த்தியாகும்.
இரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொன்னாங் கண்ணிக்கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், தேன் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment