Sunday 24 August 2014

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்
முன்னுரை:
    முனித இனத்தில் புதிய உயிர்கள் பால் இனச் சேர்க்கையின் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிருக்கும் ஆண், பெண் எனும் இரண்டு பெற்றோர்கள் உண்டு. முட்டை எனப்படும் முட்டை செல்கள் பெண்ணின் உடலிலும், விந்தணு ஆணின் உடலிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு புதிய உயிரைத் தோற்றுவிப்பதற்கு ஆண், பெண் செல்கள் ஒன்று சேர வேண்டும்.
    முட்டை செல்கள் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினைகளையும், கருவணுவகத்தில் ஏற்படும் கட்டிகயையும், அதற்கான தீர்வையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கருவணுவகத்தின் அமைப்பு:
    கருவணுவகம் என்பவை பாதாம் விதைகளின் அளவையும் அமைப்பையும் கொண்டுள்ள இரு சுரப்பிகள், கருப்பையின் இரு புறங்களிலும் பக்கத்திற்கொன்றாகவும், அகன்ற பந்தகத்தின் பின் பரப்பில் ஃபெல்லோப்பியன் குழாய் முனைகளுக்குக் கீழேயும் அமைந்துள்ளன. சுpனைப்பந்தகத்தின் மூலம் இவை கருப்பையுடன் இணைந்துள்ளன. இவை நாலரை செ.மீ நீளமும், இரண்டேக அரை செ.மீ அகலமும் 1 செ.மீ கனமும் உடையவை. சுமார் 40 ஆயிரம் பெண் முட்டைகள் இதில் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment